பெண்கள் தொழில்முனைவோர் பயிற்சிபட்டறை – கொடகம கிளையில் மகளிர் தின கொண்டாட்டம்

சுற்றுச்சூழல், சமூக மற்றும் ஆளுகை (ESG) கொள்கைகள் மற்றும் நிலையான வளர்ச்சி இலக்குகள், குறிப்பாக நிலையான வளர்ச்சி இலக்கு 5: பாலின சமத்துவம் ஆகியவற்றிற்கான அமைப்பின் உறுதிப்பாட்டிற்கு இணங்க, சர்வதேச மகளிர் தினத்தைக் கொண்டாடும் விதமாக கொடகம கிளையில் பெண்கள் தொழில்முனைவோர் பயிற்சி பட்டறை ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த முயற்சி, கிளை முகாமையாளர் திரு. டிலங்க சஞ்சீவ மற்றும் பிராந்திய முகாமையாளர்கள் திரு. கிருஷாந்த ஹென்னடிகே மற்றும் திரு. அமில எதிரிசிங்க ஆகியோரின் தலைமைத்துவத்துடன், COO திரு. லக்சந்த குணவர்தன தலைமையிலான நிலையான நிர்வாகக் குழுவின் வழிகாட்டுதலின் கீழ் நடாத்தப்பட்டது.

இந்தத் திட்டமானது, பெண்கள் தங்கள் சொந்தத் தொழில்களைத் தொடங்க, நிர்வகிக்க மற்றும் நிலைநிறுத்துவதற்கான அறிவு மற்றும் நடைமுறை வழிகாட்டுதலை வழங்குவதன் மூலமும் தொழில்முனைவோர் மூலமும் அதிகாரம் அளிப்பதை நோக்கமாகக் கொண்டது. பெண்களின் பொருளாதார பங்களிப்பை வலுப்படுத்துதல் போன்றவற்றை உள்ளடக்கியதுடன் மற்றும் நிலையான சமூக வளர்ச்சியின் முக்கிய அங்கமாகும்.

கொடகம மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட மகளிர் சங்கங்களை பிரதிநிதித்துவப்படுத்தி, சுமார் 75 பெண்கள் இந்தப் பயிற்சி பட்டறையில் பங்கேற்றனர். இந்த அமர்வில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மனிதநேயம் மற்றும் சமூக அறிவியல் பீடத்தின் குற்றவியல் மற்றும் குற்றவியல் நீதித் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் டாக்டர் கௌசல்யா ஹேவாவசம் மற்றும் பதுளையைச் சேர்ந்த உளவியலாளர் மற்றும் சிரேஷ்ட மனநல மருத்துவர் திரு. கௌமல் டி சில்வா ஆகியோரின் நிபுணர் நுண்ணறிவுகள் இடம்பெற்றன. தொழில்முனைவோர் மனநிலை மேம்பாடு, சமூக அதிகாரமளித்தல் மற்றும் தனிப்பட்ட மீள்தன்மை, பெண்கள் தன்னம்பிக்கை மற்றும் நிலையான வாழ்வாதாரத்தை கட்டியெழுப்ப உதவுதல் குறித்து பேச்சாளர்கள் வழிகாட்டுதலை வழங்கினார்கள். நிகழ்வின் இறுதியில், பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் அவர்களின் பங்கேற்பை அங்கீகரிக்கும் வகையில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

தலைமை அலுவலகம் மற்றும் கிளைகளைச் சேர்ந்த ஏனைய பெண்கள் மற்றும் ஆண் தலைவர்களுடன், திரு. லக்சந்த குணவர்தன (தலைமை இயக்க அதிகாரி), ரோஷினி இந்துருவகே (பொது முகாமையாளர் - வைப்பு சந்தைப்படுத்தல், நிலைத்தன்மை, CRM), தக்ஷிலா கோணகலகலா (சந்தைப்படுத்தல் மற்றும் தொடர்பாடல் பிரிவு தலைவர்) மற்றும் திரு. மனோஜ் சிறிவர்தன (நிலையான நிதித் தலைவர்) உள்ளிட்ட சிரேஷ்ட தலைமைத்துவ அதிகாரிகளின் பங்கேற்பால் இந்த நிகழ்வு மேலும் வலுப்பெற்றது. பாலின சமத்துவம் உள்ளடக்கிய தலைமைத்துவம் மற்றும் சமூக அதிகாரமளித்தல் ஆகியவற்றிற்கான அமைப்பின் வலுவான அர்ப்பணிப்பை அவர்களின் ஈடுபாடு எடுத்துக்காட்டுகிறது.

இந்த முயற்சியின் மூலம், Mi Finance பெண்களைப் பொருளாதார ரீதியாக மேம்படுத்துதல், சமூக மீள்தன்மையை வலுப்படுத்துதல் மற்றும் ESG கொள்கைகளுக்கு இணங்க பொறுப்பான, வளர்ச்சியை மேம்படுத்தவதற்கான அதன் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

 

 

தொடர்பு
SiteLock